-அஸ்லம் எஸ்.மெளலானா-
ஐக்கிய தேசிய கட்சியின் மருதமுனை 04 மற்றும் 05 ஆம் வட்டாரங்களுக்கான அமைப்பாளராக டிலிப் நௌஷாட் அபூபக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற கட்சி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வின்போது கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஐ.தே.க. பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்ட கால செயற்பாட்டாளரான டிலிப் நௌஷாட், பொது அமைப்புகள் ஊடாக சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். விஞ்ஞான பட்டதாரியான இவர் தற்போது கல்முனை மாநகர சபையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார்.
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான
இவர் அக்கல்லூரியின் முன்னாள் அதிபரான மர்ஹூம் முஹம்மது அபூபக்கரின் கனிஷ்ட புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment