Monday, June 10, 2024

கிழக்கு விவசாய அமைச்சின் செயலாளராக நஸீர் நியமனம்; யஹியாகான் வாழ்த்து..!

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, காணி நிர்வாகம், மீன்பிடி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளராக சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எம்.நசீர் - நியமிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியை தருவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் முக்கிய அமைச்சான விவசாய அமைச்சுடன் இணைந்ததாக  மேலும் சில பொறுப்புக்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறையைச் சேர்ந்த நஸீர் - கல்முனை பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி உள்ளார். அவரது அந்த சேவைக் காலம் பொற்காலம் எனக் கூறலாம்.

கிழக்கின் - விரல்விட்டு எண்ணக் கூடிய நிர்வாக சேவை அதிகாரிகளில் நஸீரும் குறிப்பிடத்தக்க ஒருவர்.

காலம் பிந்தினாலும் - உயரிய அமைச்சொன்றுக்கு அவர் செயலாளராக நியமிக்கப்பட்டு கடமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

கிழக்கில் காணிப் பிரச்சினை பண்ணெடுங் காலமாக நிலவி வருகின்றது. இதனை எந்த சமுகத்துக்கும் பாதிப்பில்லா வகையில் தீர்க்கக் கூடிய ஆற்றல் நஸீருக்கு உள்ளது. இப்போது, காணி நிர்வாகமும் சேர்த்து அவருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.


எனவே அதிகாரமிக்க , பலம் பொருந்திய அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் - நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான நஸீர் - மேலும் உயர் பதவிகளை எட்ட மனதார வாழ்த்துகிறேன்.

No comments:

Post a Comment