Monday, August 29, 2022

இலக்கை அடைய நினைப்பவருக்கு எதுவுமே தடை இல்லை; A/L பரிட்சை முடிவு குறித்து யஹியாகான் கருத்து.

க,பொ,த (உ/த)ப் பரீட்சை முடிவுகளின் படி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தனது வாழ்த்துக்கள், உரித்தாகட்டும் என முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார். 

வாழ்க்கையில் மேடு - பள்ளங்கள் - வெற்றி- தோல்விகள் ஏற்படுவது சகஜம். அந்த வகையில், பல்கலைக்கழகம் நுழைவதற்கான பெறுபேறுகளை பெறத் தவறிய மாணவர்களின் எதிர்காலம் சுபீட்சம் பெற பிரார்த்திப்பதாகவும் யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார் என்பதற்கு ஏற்ப - மேற்படி மாணவர்கள் மிகச் சுறுசுறுப்பாக தம்மை அடுத்து வரும் உயர்தர பரிட்சைக்கு தயார்படுத்தி சிறந்த பெறுபேறுகளை பெற வாழ்த்துகிறேன்.

இரு கரங்களை இழந்து - கால்களால் பரிட்சை எழுதிய மாணவி ஒருவர் 3 ஏ சித்திகளை பெற்றிருப்பது - இலக்கை அடைய நினைக்கும் எவருக்கும் எதுவுமே தடை இல்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பொருளாதார நெருக்கடி - அரசியல் பூகம்பம் என்பவற்றுக்கு மத்தியில்  பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கும் - சிறந்த பெறுபேறுகளைகளைப் பெற காரணமாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் உரித்தாகட்டும் என்றும் யஹியாகான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment