வாழ்க்கையில் மேடு - பள்ளங்கள் - வெற்றி- தோல்விகள் ஏற்படுவது சகஜம். அந்த வகையில், பல்கலைக்கழகம் நுழைவதற்கான பெறுபேறுகளை பெறத் தவறிய மாணவர்களின் எதிர்காலம் சுபீட்சம் பெற பிரார்த்திப்பதாகவும் யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார் என்பதற்கு ஏற்ப - மேற்படி மாணவர்கள் மிகச் சுறுசுறுப்பாக தம்மை அடுத்து வரும் உயர்தர பரிட்சைக்கு தயார்படுத்தி சிறந்த பெறுபேறுகளை பெற வாழ்த்துகிறேன்.
இரு கரங்களை இழந்து - கால்களால் பரிட்சை எழுதிய மாணவி ஒருவர் 3 ஏ சித்திகளை பெற்றிருப்பது - இலக்கை அடைய நினைக்கும் எவருக்கும் எதுவுமே தடை இல்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
பொருளாதார நெருக்கடி - அரசியல் பூகம்பம் என்பவற்றுக்கு மத்தியில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கும் - சிறந்த பெறுபேறுகளைகளைப் பெற காரணமாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் உரித்தாகட்டும் என்றும் யஹியாகான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment