Tuesday, August 23, 2022

பொறியியளாலர் அஸ்லம் சாஜா பொறியியல் பீட "இடைநிலை ஆய்வுகள்" துறையின் தலைவராக நியமனம்..!

-யூ.கே.காலித்தீன்-

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் "இடைநிலை ஆய்வுகள்" துறையின் தலைவராக சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளருமான பொறியியளாலர் கலாநிதி அஸ்லம் சாஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரினால் இவருக்கான நியமனம் 19.08.2022 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ துறையில் விசேட பட்டம் பெற்ற இவர் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும், சிலோன் மீடியா போரத்தின் பணிப்பாளரும், சாய்ந்தமருது இயற்கையை நேசிக்கும் மன்றத்தின் ஸ்தாபக செயற்பாட்டாளரும், சமூக ஆர்வளருமாவார்.

சாய்ந்தமருது  அல் - ஹிலால் வித்தியாலயத்தினதும், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியினதும் முன்னாள் அதிபர் அல்ஹாஜ். ஐ.எல்.ஏ.மஜீத் தம்பதிகளின் மூத்த புதல்வருமாவார்.

No comments:

Post a Comment